Thursday, August 14, 2014

எங்க ஊரு டவுன் பஸ்




பாம்பன் டு வேர்க்கோடு


மினி பஸ்ஸை விட கொஞ்சம் பெருசா, பஸ்ஸை விட கொஞ்சம் சின்னதா கொஞ்சம் இருக்கைகளை மட்டும் உள் வைத்து சுற்றிலும் தகரத்தினால் வேயப்பட்டு, முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பில் உருவான பேருந்து பாரம்பரியமான பஸ் எங்க டவுன் பஸ்.

ராமேஸ்வரம் தீவிற்கு இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு சாலை தொடர்பு இல்லாத நிலையில், தீவு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சுமார் 40 வருடங்களுக்கு முன்பாக கூட்ஸ் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது நம்ம ஊரு டவுன் பஸ்.

அது வரை மாட்டு வண்டிகளிலோ, சைக்கிளிலோ அல்லது நடந்தே தூரங்களை கடந்த நமது தீவு மக்களுக்கு இந்த டவுன் பஸ் ஒரு வரப் பிரசாதமாக அமைந்து என்றால் அது மிகையல்ல.

முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பாம்பன் டு வேர்க்கோடு (4ம் நம்பர்) தடமானது தீவின் பெரும்பகுதி மக்களை இணைத்தது. பின்பு கோவில் டு தனுஸ்கோடி (3ம் நம்பர்), வேர்க்கோடு டு குந்துகால், கோவில் டு பேருந்து நிலையம் என்று புதிய தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.



கோவில் டு தனுஸ்கோடி 


டவுன் பஸ் அறிமுகமான புதிதில் மணிக்கொரு முறை மட்டுமே விடப்பட்டது. தங்கச்சிமட மக்கள் பேருந்து வரும் காலத்தை வைத்தே தங்களது பயணத்தை அமைத்து கொண்டனர். வேர்க்கோடிலிருந்து தங்கச்சிமடத்திற்கு 2.15 மணிக்கு பேருந்து பாம்பனுக்கு போனால், திரும்ப தங்கச்சிமடத்திற்கு 2.50 க்கு வந்து சேரும் என்று துல்லியமாக கணக்கிட்டு தங்கச்சிமட பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்கள்.


பாம்பனிலிருந்து வேர்க்கோடிற்கு  கிட்டத்தட்ட 26 பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி புறப்படும் பேருந்தானது இடையிடையே கைகளை காட்டி மறிக்கும் எல்லோருக்கும் நின்று ஏற்றி செல்லும்.

கதிரவனுக்கு முன்பாக

அதிகாலை 4 மணிக்கு கதிரவனுக்கு முன்பாக தனது அன்றைய பயணத்தை சுறுசுறுப்பாக துவக்கி விடும் எங்கள் டவுன் பஸ். ஏனெனில் அந்த நேரங்களில் தான் எங்கள் மீனவ மக்கள்  தங்கள் தொழில்களுக்காக ஆயத்தமாவர்கள். எல்லா ஊரிலும் அதிகாலை பேருந்து கூட்டமே இல்லாமல் கடமைக்கு பயணிக்கும் ஆனால் எங்கள் ஊரில் நிற்பதற்கு கூட இடமிருக்காது. ஆண்களையும் பெண்களையும்  சரிசமமான எண்ணிக்கையில்  நிரப்பிக் கொண்டு வேர்க்கோட்டை நோக்கி பயணப்படும் எங்கள் நகரப் பேருந்து.

பேருந்திற்கும் எங்களுக்குமான உறவு முறை

இந்த டவுன் பஸ் ஆனது தங்கச்சிமட மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகும். எங்களுக்காக வடிமைக்கப்பட்டு எங்களது தேவைக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது என்பதே அதன் ரகசியம்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக, சென்னையில் வசிப்பவர்களுக்கு தெரியும் பேருந்து நடத்துனர்கள் எவ்வளவு மரியாதையாக(!) நடத்துவார்கள் என்று. அவர்கள் எவ்வளவு வயதானவர்கள் என்றாலும் ஒருமையில் மட்டுமே விளிப்பார்கள் நீ, வா, போ (கேட்டாலே கடுப்புதான் வரும்). ஆனால் எங்கள் டவுன் பஸ் லே நடத்துனரும், ஓட்டுனரும் எங்க சித்தப்பா மக்க, பெரியப்பா மக்க மாதிரி. எங்கள் நடத்துனர் அவரவர் வயது தகுந்த மாதிரி உறவு முறை வைத்து அழைப்பார், வயதானவர்களை தாத்தா, பாட்டி, கொஞ்சம் குறைந்தவர்களை பெரியம்மா, இன்னும் கொஞ்சம் குறைந்தவர்களை அக்கா அவர்களது வயது குறைந்து இருந்தாலும்.

கும்கி படத்துலே வருகிற யானையை விட எங்கள் மக்கள் வாழ்வினுடே இரண்டற கலந்து விட்டது இந்த நகரப் பேருந்து. இன்னும் எத்தனை தொழிநுட்பங்கள் எத்தகைய பேருந்துகளை கொண்டு வந்தாலும் எங்களை விட்டு பிரியாது எங்கள் டவுன் பஸ், நாங்களும் கூட.


Monday, May 19, 2014

Ramanathapuram Lok Sabha Election 2014

நடந்து முடிந்த 16 வது நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களும், அவர்கள் வாங்கிய வாக்கு எண்ணிக்கையும்.

  • தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பாக போட்டியிட்டவர்கள்  =  5 பேர்
  • அங்கீகாரம் பெறாத கட்சிகளின் சார்பாக போட்டியிட்டவர்கள் = 3 பேர்
  • சுயேட்சையாகப் போட்டியிட்டவர்கள் = 23 பேர்
  • நோட்டா வை விட குறைவான வாக்கு வாங்கியவர்கள் =  24 பேர்


Tamil Nadu - Ramanathapuram
Result Declared
Candidate PartyVotes
ANWHAR RAAJHAA.AAll India Anna Dravida Munnetra Kazhagam405945
MOHAMED JALEEL .SDravida Munnetra Kazhagam286621
KUPPURAMU .DBharatiya Janata Party171082
THIRUNNAVUKKARASAR .SUIndian National Congress62160
NOOR JIYAVUDEEN.M.ISOCIAL DEMOCRATIC PARTY OF INDIA12541
UMA MAGESWARI R.T.Communist Party of India12312
ARASAKUMAR B.T.Desiya Forward Bloc10945
GOPAL .RIndependent3969
GOKILA .KIndependent3471
ANNAMALAI .SIndependent3125
MANIVASAGAMIndependent2684
SIVAGURUNATHAN .KBahujan Samaj Party2123
KASIRAJAN .NIndependent1415
PALPANDI .CIndependent1355
THENNARASU .PIndependent1321
SASI KUMAR .SIndependent1220
BALAKRISHNAN .S.S.Independent1171
SATHIAH .GIndependent1129
THIAGARAJAN .RIndependent1037
KANNATHASAN .RIndependent999
PERIYASAMY .PIndependent985
AMIRTHALINGAM .UIndependent941
VETRIVEL .SIndependent914
AZHAGU MEENA .AIndependent835
MURUGESWARIIndependent814
AYYAPPAN .SIndependent785
ALLAPICHAI .EIndependent747
SUBBIAH .MIndependent645
VELCHSAMY .RIndependent577
RAVI .KIndependent478
MOOKAIYA .SIndependent423
None of the AboveNone of the Above6279

Friday, May 02, 2014

சாப்பாட்டு புராணம் விகடனில்

இந்த வார ஆனந்த விகடனின்(07-05-2014)ஆறாம் திணையில், எனது சாப்பாட்டு புராண பதிவிலிருந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் பிரபலமான உணவு வகைகளில் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளனர்.

எனது பதிவு: சாப்பாட்டு புராணம்

ஆனந்த விகடன் ஆறாம் திணையின் பக்கங்கள்..






























Thursday, December 19, 2013

A History of Paravars

Fisher men in Thangachimadam












தங்கச்சிமடத்தில் மிகப் பெரும்பான்மையாக வசிக்கும் பரவர் இன மக்களின் வாழ்க்கை முறைகளையும் மற்றும்  இனத்தின் ஆதி வேர்களையும் தேடிச் செல்லும் ஒரு பயணம்.

பரவர் இனத்தின் வரலாறு பற்றி ஜெயமோகன்

இன்றைய காலகட்டத்தில் இந்த மிஷனரி வரலாறுக்கு எதிராக ஆணித்தரமான வரலாறுகள் உருவாகிவரவேண்டிய கட்டாயம் உள்ளது. தங்களால் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு பாரம்பரியமோ வரலாறோ இல்லை, அவர்கள் அதற்கு முன்னர் கீழ்த்தரமான பழங்குடிகளாக இருந்தார்கள் என்று காட்டுவது மிஷனரி வழக்கம். இன்றும் அம்மனநிலை நீடிக்கிறது.

உதாரணமாக மதம் மாறிய கிறித்தவ பரதவர்கள் குறித்தும் இதே கதைதான் உள்ளது. அதை அம்மக்களும் நம்புகிறார்கள்.
ஆனால் பரதவர்களில் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நிலப்பகுதி அவர்களாலேயே ஆளப்பட்டது. பாண்டிய வம்சமேகூட ஒரு பரதவ வம்சத்தின் நீட்சியே. ஏன் மிகச்சமீபகாலத்திலேயே  பதினேழாம் நூற்றாண்டின் செண்பகராமன் பள்ளு போன்ற நூல்கள் பரதவ மன்னர்களைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளன. மார்த்தாண்டவர்மாவே பரதவ ஆட்சியாளர்களை அங்கீகரித்து தம்பி பட்டம் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

பரதவர் மதம் மாறியது இஸ்லாமியர் படையெடுப்புகளில் இருந்து போர்ச்சுக்கல் கப்பித்தான் பாதுகாப்பு கோரந்த்தானே ஒழிய சாதி இழிவினால் அல்ல என்பது தெளிவாகவே பதிவாகி கைக்கு கிடைக்கும் வரலாறு.

விக்கி பீடியா குழுவினரின் அங்கரிக்கப் பட்ட கட்டுரை:

பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.

இலக்கியத்தில் பரதவர்

பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.
பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பழம் குலப் பெயர்கள்

பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு. இதில் ஒரு பெயரான ஆரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

சிறப்புக்கள்

பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மஸ்கார்னாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரதகுலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.

தியாகி பெஞ்சமின்

குலசேகரபட்டினம் உப்பளத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்து, அவர்களிடமிருந்த துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது. இந்தக்குழுவைக் துப்பாக்கியின் பின்புறத்தினால் தாக்கிய டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரியை அந்தக் குழு கொலை செய்தது. இந்தக் குற்றத்திற்காக இந்தக் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக்குழுவினருள் மூன்றாமவர் பரதர் குலத்தைச் சேர்ந்த தியாகி பெஞ்சமின். இந்தக் குழுவினருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற வழக்குகளில் கடைசியாக ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நாடு விடுதலையடைந்ததை அடுத்து இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கொற்கை

2013 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட கொற்கை நாவல் பரதவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளை அழகாக ஆவணப் படுத்துகிறது. இதை எழுதியவர் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மேலும் இவர் மீனவ இனத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளரைப் பற்றி:
தூத்துக்குடி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜோ டி குரூஸ் கொற்கை என்ற புதினத்தையும் ஆழி சூழ் உலகு என்ற நூலையும் எழுதியுள்ளார். அவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. மேலும் 2013ல் வெளியான மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

மீன் பிடித் தொழிலை குலத் தொழிலாக கொண்டுள்ள பரதவ இன மக்களைப் பற்றி எழுத இனப் பாசம் தவிர வேறு எதுவும் கரணங்கள் உள்ளதா? விளக்கமளிக்கிறார் எழுத்தாளர்.

மீனவர்களைப் பற்றி எழுத எது உந்துகோலாக இருந்தது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது.

முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன்.

கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன்.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். பச்சை மீனை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் ‘விடியாத பொழுதுகள்’ என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

Friday, October 18, 2013

சாப்பாட்டுப் புராணம்



ஒரு நாட்டுடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சார மதிப்பீடுகளில் தலையாயது 'அந்த மண்ணில்  தயாராகும் உணவு வகைகள் என்றால் அது மிகையல்ல.

ஒவ்வொரு வகை உணவுகளும்பல தலைமுறைகளின் பரிமாணங்களை, மக்களின் பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறைகளை, விருந்தோம்பல் கூறுகளை உள்ளடக்கிருக்கும்.

ஆம்பூரில்  அரேபியர்களின் விருப்ப உணவான ‘தம் பிரியாணி’ இடம் பிடிச்சது எப்படி? ஸ்ரீவில்லிபுத்துர்லே ‘பஞ்சாபி  பால்கோவா’ எப்படி சாத்தியமாச்சு? ‘மணப்பாறை முறுக்குக்கு’ மட்டும் எப்படி அப்படியொரு சுவை வந்துச்சு? இப்படியாக நீங்கள் ஒவ்வொரு உணவின் வேர்களை தேடி சென்றால்.. அவைகள்  அந்த ஊர் மக்களின் வரலாற்றை தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு வகைகளை நீங்கள் உலகளவில் பட்டியலிட முயன்றால் தமிழ்நாடு மற்றும் உலகத்தின் பிற பகுதிகள் ன்னு இரு வேறாக பிரிக்க வேண்டியிருக்கும். அத்தனை விதமான உணவு வகைகள், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கிறது.

தமிழ் மொழி எவ்வளவு செழுமையானதோ அதற்கு சற்றும் சளைத்தவனவல்ல 'தமிழ்நாட்டு உணவு வகைகள்'. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

மத்த ஊரை பாக்குறதுக்கு முன்னாடி நம்ம ஊருலே இருந்த, இருக்குற சிறப்பான உணவு வகைகளை பார்ப்போமா?

சிறப்பான உணவு வகைகள் - தங்கச்சிமடம்

1. செட்டி கடை பரோட்டா (முருகன் கோவில் ஸ்டாப்)- நினைச்சாலே நாக்குலே எச்சி லிட்டர் கணக்கா ஊருமே.
2. முனியாண்டி கடை டீ (முதல் ஸ்டாப்)- அவரோடே டீ ஒரு 'சுவை' ன்னா, அவரு டீ போடுறே அழகே தனி 'ஸ்டைலு' தாங்க.
3. சீதாபதி கடை சுண்டல் மற்றும் வடை ( முருகன் கோவில் ஸ்டாப் அருகே அமைந்திருந்தது , இப்பொழுது வடக்கு தெரு போகும் வழியில்)
4. ராஜேந்திரன் கடை குஷ்கா (சமையன் கோவில் போகும் வழியில்)
5. பெருமாள் டீக் கடை வெங்காய போண்டா (முருகன் கோவில் ஸ்டாப்)

இதைத் தவிர, வெளியூரிலுருந்து வந்து நம்மை சிறப்பித்தவர்கள்.

1. தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்..ல்ல்ல்
2. அல்வா ரொதல்..ல்ல்ல்ல்..
3. பயறு பயறு..றுறுறு
4. ஐஸ்.. குச்சி ஐஸ் ..பால் ஐஸ்
5. சிங்கி... சிங்கி ன்னு அடிக்கிற பொம்மையோடு வரும் ஜவ்வு மிட்டாய்

இப்போ மத்த ஊர்களை பார்க்கலாமா?...

சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு

    1.   சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

    2.    நடுக்கடை  : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

    3.    சிதம்பரம் கொத்சு

    4.    புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

    5.    திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

    6.    கும்பகோணம் பூரி-பாஸந்தி

    7.    ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

    8.    மன்னார்குடி அல்வா

    9.    கூத்தாநல்லூர் தம்ரூட்

    10.  நீடாமங்கலம் பால்திரட்டு

    11.  திருவையாறு அசோகா

    12.  கும்பகோணம் டிகிரி காபி

    13.  விருதுநகர் பொரிச்ச பரோட்டா

    14.  கோவில்பட்டி கடலை மிட்டாய்

    15.  ஆம்பூர் தம் பிரியாணி

    16.  நாகர்கோவில் அடை அவியல்

    17.  சாத்தூர் சீவல்

    18.  திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

    19.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

    20.  செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்

    21.  மணப்பாறை அரிசி முறுக்கு

    22.  கீழக்கரை ரொதல்அல்வா

    23.  திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

    24.  பண்ருட்டி முந்திரி சாம்பார்

    25.  மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

    26.  சாயல்குடி கருப்பட்டி காபி

    27.  பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா 

    28.  பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

    29.  கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

    30.  புதுக்கோட்டை முட்டை மாஸ்

    31.  தூத்துக்குடி மக்ரூன்

    32.  கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

    33.  ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

    34.  ஈழத் தமிழர்கள் சொதி மற்றும் தேங்காய்ப்  பால்

    35.  செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

    1. குழிப்பணியாரம்

    2. வாழைப்பழ தோசை

    3. எண்ணெய் கத்தரிக்காய்

    4. பால் பணியாரம்

    5. பூண்டு வெங்காய குழம்பு

    6. ரவா பணியாரம்

    7. பால் கொழுக்கட்டை

    8. சேமியா கேசரி

    9. மோர் குழம்பு

    10. நாட்டுகோழி மிளகு வறுவல்

    11. இறால் தொக்கு

    12. நட்டுக் கோழி ரசம்

    13. நண்டு மசாலா

    14. வெண்டைக்காய் புளிக்கறி

    15. பருப்பு சூப்

    16. ரிப்பன் பக்கோடா

    17. பருப்பு உருண்டை குழம்பு

    18. குருமா குழம்பு

    19. தேன்குழல்

    20. கருப்பட்டி பணியாரம்

    21. சீயம்

    22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும்   வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"

  குறிப்பு: எழுத்தாளர் சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணமே இந்த கட்டுரைக்கான உந்துதல்.

 

Saturday, October 05, 2013

தங்கச்சிமடம் மீனவர்களுக்கு நவீன கைபேசி

மீனவநண்பன் - தங்கச்சிமடம் மீனவர்களுக்கு நவீன கைபேசி

ஆபத்து காலங்களில் பயன்படும் வகையிலான நவீன ரக கைபேசிகளை (Mobile Phones) மீன்வளத்துறை மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. இதற்க்கு 'மீனவ நண்பன்' என பெயரிடப் பட்டுள்ளது.

 இந்த கைப்பேசிகள் முதன் முறையாக தமிழகத்தில் தங்கச்சிமடம் பகுதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சோதனை முயற்சியாக பத்து பேருக்கு மட்டும் தற்போது நவீன கைப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிறகு அனைத்து மீனவர்களுக்கும் மானிய விலையில் இந்த கைப்பேசிகள் வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலில் ஆபத்து நேரிடும் போது சக மீனவர்களை உதவிக்கு அழைக்கும் வகையிலும், பருவநிலை மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் நவீன கைபேசி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு நலத்திட்டங்கள், கடலில் ஆபத்தான பகுதிகள் உள்ளிட்ட விபரங்களும் இந்த கைபேசியில் இடம்பெற்றுள்ளது.

Thangachimadam Fishermen Friend Mobile
கைப்பேசி வழங்கும் விழா         
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கடைகோடியில் இருக்கும் ஏழை மக்களுக்கும் அறிவு சார்ந்த கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொழில்நுட்பங்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் கிராம வள மையம் மற்றும் கிராம அறிவு மையங்கள் என்ற திட்டம். முதன் முதலில் புதுச்சேரியில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் மாறிவரும் இன்றைய கால சூழலுக்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப பரிமாணங்களை பெற்று சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. உள்ளூர் மக்களின் தேவைகளைப் கண்டறிந்து தகவல் தொழில்நுட்பங்கள் வாயிலாக அவற்றை உரிய மக்களிடத்தில் சரியான நேரத்தில் கொண்டுப்போய் சேர்ப்பதே இந்தத்திட்டத்தின் சிறப்பம்சம். 2004-ல் முதல் இத்திட்டம் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, கேரளா மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு இதன் மூலம் வேளாண்மை, மீன்வளம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைச்சார்ந்த தகவல்களை உள்ளூர் மொழிகளில் அந்தந்த கிராம மக்களுக்கு ஏற்ற வகையில் அளித்து வருகின்றது.

2007 ஆண்டு முதல் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதார பிரச்சனையைத் தீர்க்கவும், விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியைக் குறைக்கவும் கைப்பேசி தொழில்நுட்பத்தை ஒரு பாலமாக ஏற்று தொடர்ந்து செயலாற்றி வருகின்றது. இந்த புதிய கைப்பேசி தொழில்நுட்பங்கள் மூலம் மீன் பிடித் தொழில் சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களை அச்சமுதாயத்தினருக்குப் பயன் அளித்திட முடிவு செய்து, தனது சேவையை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலத்திற்கு விரிவுபடுத்தியுள்ளது. மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலில் பாரம்பரிய அறிவும், புலமையும் இருந்த போதிலும் அத்தொழிலில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து லாபத்தைப் பெருக்கிட புதிய தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அத்தொழில்நுட்பங்களை சாதாரண மீனவர்கள் அறிந்து கொள்வதும் அவற்றை பயன்படுத்துவதும் பெரும் சவாலாக விளங்குகிறது. இச்சவால்களை மேலும் சிக்கலாக்கும் வண்ணம் சுனாமி (ஆழிப்பேரலை) போன்ற இயற்கைச் சீற்றங்களும் வழிகோல்கிறது. இத்தகைய சூழல்களை மேற்கொள்ளும் மீனவ நண்பர்கள் மேற்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே இந்த இந்த மீனவ நண்பன் கைப்பேசித் திட்டம்.

'மீனவ நண்பன்' கைப்பேசி திட்டம் ஒரு பார்வை

மீனவ நண்பன் கைப்பேசி என்பது ஒரு செயலி. இது ஆன்டிராய்டு தளம் உள்ள கைப்பேசியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும். இந்த கைப்பேசியின் மூலம் மீனவ சமூகத்தினர் கீழ்கண்ட தகவல்களை பெறலாம்

ஃ அதிக மீன்கள் கிடைக்க சாதகமான மண்டலங்கள்,
ஃ கடல் அலை உயரம், காற்றின் வேகம், பேரலை முன்னெச்சரிக்கை போன்ற கடல் நிலைத் தகவல்கள்,
ஃ வானிலை முன்னறிவிப்பு,
ஃ புவியில் உள்ள இடங்களை அறிந்துகொள்ள உதவும் கருவி (GPS) மூலம் கரையிலிருந்து கடலுக்கும் மீண்டும் பாதுகாப்பாகக் கரையை வந்தடையவும் கடல்வழிப் பாதையை மீனவர்களுக்கு அளித்தல்,
ஃ கடல் சர்வதேச எல்லையை நெருங்குவதையும், அடைவதையும் சுட்டிக்காட்டுதல்,
ஃ இடம் காட்டும் கருவி மூலம் பாறைகள், மூழ்கிய கப்பல் மற்றும் அழிந்துபோன பவளப்பாறைகள் போன்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிய மீனவர்களுக்கு உதவுதல்,
ஃ அவசர சூழல்களில் முக்கியமான நபர்களை, மீனவ அவசர உதவி எண் ஆகியவைகளை எளிதாக அணுக உதவுதல்,
ஃ மீனவ சமுதாயத்தினருக்கு அரசுத் திட்டங்கள், செய்திகள், கொள்கைகள் மற்றும் புதிய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கொடுத்து அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துதல்

நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள்

ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ சமுதாயத்தினரின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப தனது தகவல் தொழில்நுட்பத் தளத்தினில் உள்ள விஞ்ஞானத் தகவல்களை அவ்வப்பொழுது புதுப்பித்துக் கொள்கின்றது. இத்தகைய தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. தனியார் மற்றும் அரசுத்துறைகளுடன் உள்ள உறுதியான பங்கேற்பினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உதாரணமாக, தேசிய கடல்நிலை தகவல்கள் ஆய்வு மையம், ஐதராபாத், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு மீன் வளத்துறை, மீன் வள பல்கலைக் கழகங்கள் மற்றும் இந்தியக் கடலோர காவல்படை ஆகியன இத்தகவல்களை வழங்குகின்றன.

மீனவ நண்பன் தனித்துவம் மற்றும் பங்கேற்பு

குறைந்த விலையில் அதிவேகமாக வளர்ந்துள்ள கைப்பேசியின் வாயிலாக ஜூலை 2006-ஆம் ஆண்டு ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், குவால்காமும் (Qualcomm) இணைந்து மீனவ சமுதாயத்துக்கு கைப்பேசியின் மூலம் எவ்வாறு தகவல்களை அனுப்பலாம் என்பது குறித்த கருத்தரங்கை துவங்கியது.

கருத்தரங்கின் தொடர்ச்சியாக ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம், டாடா தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அஸ்டியூட் தனியார் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தளத்தின் வாயிலாக மீனவ நண்பன் கைப்பேசி முதல் வடிவம் உருவாக்கப்பட்டது. அது முழுவதும் சிடிஎம்ஏ என்று சொல்லக்கூடிய மொபைல் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இந்த கைப்பேசியின் மூலம் மீனவர்கள் கடல்நிலைத் தகவல்கள், மீன்கள் அதிகமாக கிடைக்கக்கூடிய மண்டலங்கள், சந்தை நிலவரம் மற்றும் அரசு நலத் திட்டங்கள் போன்றவை அறிவுச் சார்ந்த விஷயங்கள் மீனவர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் மாறிவரும் மீனவர்களுடைய தேவைகள் மற்றும் கால வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீனவ நண்பன் கைபேசி புதிய வடிவம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கில் செயல்படும் ஆன்டிராய்டு தளத்தில் கூடுதல் சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அக்கூடுதல் அம்சங்களாவன:

ஃ குறிப்பிட்ட மீன் இனங்களுக்கான தகவல்கள் மற்றும் சந்தை நிலவரங்கள்,
ஃ சர்வதேச எல்லையை நெருங்குவதையும், அடைவதையும் சுட்டிக்காட்டுதல்.
ஃ இடம் காட்டும் கருவி மூலம், பாறைகள், மூழ்கிய கப்பல் மற்றும் அழிந்துபோன பவளப்பாறைகள் போன்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிய மீனவர்களுக்கு உதவுதல்.
ஃ அவசர சூழல்களில் முக்கியமான நபர்களை, மீனவ அவசர உதவி எண் ஆகியவைகளை எளிதாக அணுக உதவுதல்.
ஃ முன்கூட்டியே வானிலை தகவல்களைத் தருவதன் மூலம் பேரலைகளில் சிக்காமல் உயிர் காக்க உதவுகின்றது.

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம் மற்றும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனங்கள் இணைந்து இந்த மீனவ நண்பன் இரண்டாம் பாகம் திட்டத்தை உருவாக்கியுள்ளன. குவால்காம் இத்தகைய புதிய முயற்சிக்கு நிதி உதவியையும், டி.சி.எஸ். செயலியையும் உருவாக்கியுள்ளது. ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயலி வடிவமைப்பு, அனைத்து தகவல்கள், முதல்கட்ட பரிசோதனை மற்றும் மீனவ சமுதாயத்துக்கு உகந்த மிக முக்கியமான தகவல்களை தளமேற்றுதல் போன்றவை செய்து வருகின்றது.

இத்திட்டத்தின் தனித்துவம் என்னவென்றால் இச்செயலியை வடிவமைத்தலில் இருந்து அதனை நடைமுறைப்படுத்திவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் மீனவர்களைக் ஈடுபடுத்தி அவர்களை பங்கேற்க செய்து அவர்களுடை கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைப்பு செய்ததேயாகும். இத்தொழில்நுட்ப தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில் இதன் நெகிழ்வுத் தன்மை மற்றும் எளிமையை பயன்படுத்தி இச்செயலியைப் பயன்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மீனவ சமுதாயத்துக்குத் தேவையான தகவல்களை அளிக்க தேவைப்படும் மாற்றங்களைச் செய்யவும் முடியும்.

Monday, September 30, 2013

Madurai Malli - Seedlings Are Grown from Thangachimadam

Island of Jasmine

Temple City(Madurai) Is Famed For Its Jasmine 'Maduai Malli', But The Seedlings Are Grown for Thangachimadam Near Rameswaram And Transported Across South.
















Jasmine is almost synonymous withthetemplecity of Madurai but the famed Madurai malli has its origins in the littleknown village of Thangachimadam on Rameswaram island.

Jasmine nurseries abound in this coastal hamlet although fishing is the predominant activity.Around 300 farmers cultivate the exotic jasmine variety that is known for its unique fragrance.Small nurseries cover at least 150 acres in the village.


Though Madurai malli plants are raised inland too,the ones grown here have a high yield.So farmers prefer buying from us, said V Balraj,a farmer from Thangachimadam.
"Every year,farmers send two crore jasmine seedlings across south India with buyerscoming from asfar asHubliin Karnataka,places in Andhra Pradesh and from all over Tamil Nadu.
Every nursery has a small plantation where mother plants are maintained.From these plants,new seedlings are createdusing the groundlayering system.The seedlings are transferred to a special nursery covered with thatched roof to shield the delicate plants from direct sunlight.Theseedlings arekeptherefor 40days.The thatched covers are then removed and the seedlings are exposed to direct sunlight for 90 days,after which they are sold.The sandy soil in the region helps the seedlings grow faster and the unique climate and soil are responsible for the fragrance and beauty of the flowers,the farmers said."


Unlike other jasmine varieties,Madurai malli has nine to 12 buds,giving more flowers.The yield is very consistent from the seedlings raised in Thangachimadam, said Balraj.













V Muthumari,another farmer,said there was no assistance from the horticulture department and the power crisis had affected watering the seedlings.We are not entitled to any schemes and we are struggling to water the tender plants because of the regular power cuts, he said.
Senior officials from the horticulture department said there were some problems in providing assistance to the farmers.There are no schemes for layering of plants,which is predominant in these nurseries, the official said,adding that the district administration had sent out a proposal to construct green houses for seedlings.


Though the plants they raise have received international recognition,the farmers say neither they nor their village are known. Many people do not know that the motherland of this jasmine is Rameswaram island, said Muthumari.






















WHAT MAKES MADURAI MALLI SPECIAL?
Superior fragrance due to the red soil,where nutrients are found in balanced proportions
Thick petals,equal length of the stalk and the flower makes it ideal for making garlands
Pure white colour. Can be preserved for two days without discolourationa.

EXPORTED TO : Sri Lanka,Singapore,Malaysia and Middle Eastern countries.


Credit: Times Of India.