Saturday, September 22, 2012

Jesus appeared in Thangachimadam Infant Jesus Temple

தங்கச்சிமடம் குழந்தை இயேசு ஆலயத்தில் இயேசு தோன்றி மறைந்ததாக பரபரப்பு.

(சம்பவம்  நிகழ்ந்தது - திங்கள்கிழமை, ஜூன் 7, 2010)
 
தங்கச்சிமடம் அற்புத குழந்தை ஏசு ஆலயத்தில் ஏசுநாதர் தோன்றி மறைந்ததாக பக்தர்கள் கூறியுள்ளனர்.ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அற்புத குழந்தை ஏசு ஆலயம் கடந்த ஏப்ரல் 18 ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் பக்தர்கள் கடந்த 2 மாதமாக சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இப் பகுதியை சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் என்பவர் வழிபாடு செய்தார். அவர் பிரார்த்தனை முடித்து கண்விழித்து பார்த்த போது சர்ச்சின் டைல்ஸ் பதித்த தரைதளத்தில் ஒன்றரை அடி நீள அகலத்தில் இயேசு, மாதா உருவங்கள் மாறி மாறி வந்து சென்றாக கூறினார்.

இதைப் பார்த்து அதிசயித்த மாணவர் ஜனார்த்தனன் ஓடிச்சென்று அங்குள்ள பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான், உதவி பங்கு தந்தை பாக்யநாதன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் இந்த அதிசயத்தை பார்த்தாக கூறப்படுகின்றது.

இத் தகவல் ராமேஸ்வரம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் சர்ச்சை நோக்கி படையெடுத்தனர். அவர்களும் இந்த அதிசயத்தை நேரில் பார்த்தாக கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் தங்களது செல்போன், கேமராக்கள் மூலம் படம் எடுத்தும் சென்றனர்.

வீடியோ காட்சி:
   

இந்த அதிசயம் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் அந்த சர்ச்சுக்கு பெருமளவில் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.