Friday, October 18, 2013

சாப்பாட்டுப் புராணம்



ஒரு நாட்டுடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சார மதிப்பீடுகளில் தலையாயது 'அந்த மண்ணில்  தயாராகும் உணவு வகைகள் என்றால் அது மிகையல்ல.

ஒவ்வொரு வகை உணவுகளும்பல தலைமுறைகளின் பரிமாணங்களை, மக்களின் பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறைகளை, விருந்தோம்பல் கூறுகளை உள்ளடக்கிருக்கும்.

ஆம்பூரில்  அரேபியர்களின் விருப்ப உணவான ‘தம் பிரியாணி’ இடம் பிடிச்சது எப்படி? ஸ்ரீவில்லிபுத்துர்லே ‘பஞ்சாபி  பால்கோவா’ எப்படி சாத்தியமாச்சு? ‘மணப்பாறை முறுக்குக்கு’ மட்டும் எப்படி அப்படியொரு சுவை வந்துச்சு? இப்படியாக நீங்கள் ஒவ்வொரு உணவின் வேர்களை தேடி சென்றால்.. அவைகள்  அந்த ஊர் மக்களின் வரலாற்றை தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு வகைகளை நீங்கள் உலகளவில் பட்டியலிட முயன்றால் தமிழ்நாடு மற்றும் உலகத்தின் பிற பகுதிகள் ன்னு இரு வேறாக பிரிக்க வேண்டியிருக்கும். அத்தனை விதமான உணவு வகைகள், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கிறது.

தமிழ் மொழி எவ்வளவு செழுமையானதோ அதற்கு சற்றும் சளைத்தவனவல்ல 'தமிழ்நாட்டு உணவு வகைகள்'. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

மத்த ஊரை பாக்குறதுக்கு முன்னாடி நம்ம ஊருலே இருந்த, இருக்குற சிறப்பான உணவு வகைகளை பார்ப்போமா?

சிறப்பான உணவு வகைகள் - தங்கச்சிமடம்

1. செட்டி கடை பரோட்டா (முருகன் கோவில் ஸ்டாப்)- நினைச்சாலே நாக்குலே எச்சி லிட்டர் கணக்கா ஊருமே.
2. முனியாண்டி கடை டீ (முதல் ஸ்டாப்)- அவரோடே டீ ஒரு 'சுவை' ன்னா, அவரு டீ போடுறே அழகே தனி 'ஸ்டைலு' தாங்க.
3. சீதாபதி கடை சுண்டல் மற்றும் வடை ( முருகன் கோவில் ஸ்டாப் அருகே அமைந்திருந்தது , இப்பொழுது வடக்கு தெரு போகும் வழியில்)
4. ராஜேந்திரன் கடை குஷ்கா (சமையன் கோவில் போகும் வழியில்)
5. பெருமாள் டீக் கடை வெங்காய போண்டா (முருகன் கோவில் ஸ்டாப்)

இதைத் தவிர, வெளியூரிலுருந்து வந்து நம்மை சிறப்பித்தவர்கள்.

1. தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்..ல்ல்ல்
2. அல்வா ரொதல்..ல்ல்ல்ல்..
3. பயறு பயறு..றுறுறு
4. ஐஸ்.. குச்சி ஐஸ் ..பால் ஐஸ்
5. சிங்கி... சிங்கி ன்னு அடிக்கிற பொம்மையோடு வரும் ஜவ்வு மிட்டாய்

இப்போ மத்த ஊர்களை பார்க்கலாமா?...

சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு

    1.   சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

    2.    நடுக்கடை  : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

    3.    சிதம்பரம் கொத்சு

    4.    புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

    5.    திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

    6.    கும்பகோணம் பூரி-பாஸந்தி

    7.    ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

    8.    மன்னார்குடி அல்வா

    9.    கூத்தாநல்லூர் தம்ரூட்

    10.  நீடாமங்கலம் பால்திரட்டு

    11.  திருவையாறு அசோகா

    12.  கும்பகோணம் டிகிரி காபி

    13.  விருதுநகர் பொரிச்ச பரோட்டா

    14.  கோவில்பட்டி கடலை மிட்டாய்

    15.  ஆம்பூர் தம் பிரியாணி

    16.  நாகர்கோவில் அடை அவியல்

    17.  சாத்தூர் சீவல்

    18.  திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

    19.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

    20.  செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்

    21.  மணப்பாறை அரிசி முறுக்கு

    22.  கீழக்கரை ரொதல்அல்வா

    23.  திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

    24.  பண்ருட்டி முந்திரி சாம்பார்

    25.  மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

    26.  சாயல்குடி கருப்பட்டி காபி

    27.  பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா 

    28.  பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

    29.  கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

    30.  புதுக்கோட்டை முட்டை மாஸ்

    31.  தூத்துக்குடி மக்ரூன்

    32.  கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

    33.  ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

    34.  ஈழத் தமிழர்கள் சொதி மற்றும் தேங்காய்ப்  பால்

    35.  செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

    1. குழிப்பணியாரம்

    2. வாழைப்பழ தோசை

    3. எண்ணெய் கத்தரிக்காய்

    4. பால் பணியாரம்

    5. பூண்டு வெங்காய குழம்பு

    6. ரவா பணியாரம்

    7. பால் கொழுக்கட்டை

    8. சேமியா கேசரி

    9. மோர் குழம்பு

    10. நாட்டுகோழி மிளகு வறுவல்

    11. இறால் தொக்கு

    12. நட்டுக் கோழி ரசம்

    13. நண்டு மசாலா

    14. வெண்டைக்காய் புளிக்கறி

    15. பருப்பு சூப்

    16. ரிப்பன் பக்கோடா

    17. பருப்பு உருண்டை குழம்பு

    18. குருமா குழம்பு

    19. தேன்குழல்

    20. கருப்பட்டி பணியாரம்

    21. சீயம்

    22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும்   வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"

  குறிப்பு: எழுத்தாளர் சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணமே இந்த கட்டுரைக்கான உந்துதல்.

 

No comments: