Monday, December 19, 2011

இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பினர் .
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 28ம் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த  எமர்சன், அகஸ்டஸ், போல்டெட், பிரசாத், வில்சன்ட் ஆகியோர் மீது போதை பொருள் கடத்தியதாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டிச.,19ல் இலங்கை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசு, எமரேட், சிப்பிசேசு, நிரபராதி மீனவர்களை விடுவிக்கும் அமைப்பின் தமிழக பிரதிநிதி அருளானந்தம் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் ஜஸ்டின், சந்திரன், ஆலிவர், மாரி, பத்மநாபன் ஆகியோர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் திரும்பினர்.

No comments: