Wednesday, November 14, 2012

நோயின் கோரப் பிடியில் தங்கச்சிமடம்!

 
நண்பர்களே, இந்த தீபாவளி தங்கச்சிமடம் மக்களுக்கு  துயர தீபாவளி யாக இருந்திருக்கும். 
மலேரியா, டபுள் மலேரியா, டெங்கு இன்னும் பல பெயர் தெரியாத நோய்களுக்கு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் ஆட்பட்டு அவதிப்படுகின்றனர்.
 மக்களிடம் நோயைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை ! ஆனால் அதில் கொஞ்சங் கூட அக்கறை கொள்ளாமல் அரசு இயந்திரம் தூங்குகிறது. இதை நன்றாக பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன!!! 
தங்கச்சிமடத்தை பெயர் தெரியாத தோற்று நோய்கள் கொஞ்ச கொஞ்சமாக அரிக்க துவங்குகிறது! இதை நாம் இப்பவே தடுத்த நிறுத்தாவிடில் அது நமக்கான பெரிய இழப்பில் கொண்டு சென்று விடும். 

நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் தங்கச்சிமடத்தை நோயின் அரக்க பிடியிலிருந்து விடுவிக்க ?

நான் இன்று தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு  மற்றும் குடும்ப த்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜய் அவர்களை தொடர்பு கொண்டு இதை பற்றி விரிவாக எடுத்துரைத்தேன், அவரும் பொறுமையாக கேட்டு விட்டு 'இணை இயக்குனரிடம் (JD) ' சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 
மேலும் நமது மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு  மற்றும் குடும்ப த்துறை இயக்குனருக்கும் ஈமெயில் செய்துள்ளேன்.

Minister Of Health : Dr.V.S. Vijay (Phone:  25670682 (O), 24620002 (R))
Secretary : Dr J. Radhakrishnan IAS (Phone:  25671875 (O), 24795238 (R), 25671253 (Fax)
                     Email: hfsec@tn.gov.in )
Ramanthapuram District Collector : Thiru K Nanthakumar IAS (Phone : 231220(O), Email: collrrmd@tn.nic.in )

No comments: